திங்கள், 6 மே, 2013

தன் காதலை தன்னோட வருங்கால மாமனாருக்கு நாசூக்காக கூறிய இளைஞன் (வீடியோ இணைப்பு)




நம்மாளுங்க ஒவ்வொருதருக்கும் காதல் அனுபவம் கண்டிப்பா இருக்கும்,
அதுல‌ காதல்ல ஜெயிச்சவங்களா இருந்தாலும் சரி காதல்ல தோத்தவங்களா இருந்தாலும் சரி ஒவ்வொருத்தருக்கும் காதல் மேல ஒரு தனிப்பட்ட அபிப்பிராயம் இருக்கும்.

அந்த வகையில் விஜய் டீவியில் நீயா நானா நிகழ்ச்சியில் கலந்து காதல் கல்யாணம் பன்னினவங்க அவங்களோட தனிப்பட்ட கருத்த சொல்லி இருக்காங்க அதுல ஏத்துக்ககூடிய கருத்தும் இருக்கு.

ஆனா பொதுவா பாத்தா ஏத்துக்க முடியாதுனு சொல்லுறவங்க நிறைய பேர் இருப்பாங்க அவங்க மேலையும் தப்பில்ல ஆனாலும் இதுல காதல் கல்யாணம் தப்புனு சொல்றவஙளா இருந்தாலும் சரி தப்பில்லனு சொல்றவஙளா இருந்தாலும் சரி இந்தெ ரெண்டு வேறு பட்ட கருத்துக்கள் கொண்டவங்க மேலயும் தப்பு இல்லைனு தான் சொல்லனும்.

ஏன்னா என்னைய பொறுத்தவரைக்கும் காதல் கல்யாணம் பன்னி சந்தோஷமா இருந்தவங்களையும் பாத்திருக்கேன் அதே போல இந்த நிகழ்ச்சில சொல்ற மாதிரி கஷ்டப்பட்டவங்களையும் பாத்திருக்கேன் அதால ஒவ்வொருத்தரோட குடும்ப சூழ்னிலை மட்டுமே அவங்க கல்யாணத்துக்கு பின்னான எதிர்காலத்துக்கு காரணம்.

அதனால அவங்க அவங்க குடும்ப சூழ்னிலைய மனசில வைச்சுக்கொண்டு அவங்களோட காதல அவங்களோட குடும்பத்துக்கு தெரியபடுத்தி காதலிலும் வெற்றி பெற்று கல்யாணம் மற்றும் கல்யாணத்திற்கு பின்னான எதிர்கால வாழ்க்கையிலும் வெற்றி பெற்று சந்தோஷமான வாழ்க்கையை வாழணும்.