எம்.ஜி.ஆர் சினிமாவில் நடிப்பதற்கு முன் சென்னை சென்ட்ரல் ஸ்டேஷன் அருகே வால்டாக்ஸ் சாலையில் இருந்த ஒரு வீட்டில் தன் தாய் , சகோதரர் எம்.ஜி.சக்கரபாணி ஆகியோரோடு வசித்து வந்தாற் எம்.ஜி.ஆர். அன்றாட சாப்பாட்டுக்கே சில சமயம் கஷ்டப்பட்ட நேரம் அது.
ஒரு ஜப்பானிய தம்பதியினர் வீட்டில் சமையல்காரராக பணி புரிந்து வந்த ராமன் குட்டி என்ற குடும்ப நன்பர் எம்.ஜி.ஆருக்கு ஐந்து ரூபாய் குடுத்து உதவினார். அந்த பணத்தில் அரிசி வாங்கி சாபிட்டது, மிகவும் தேவைப்பட்ட போது அவர் உதவியதை நினைவில் வைத்திருந்தார் எம்.ஜி.ஆர்.
பின்பு ஹீரோவானதும் அவரைத்தேடினார் எம்.ஜி.ஆர், எங்கு தேடியும் அவர் கிடைக்கவில்லை. ஜப்பானிய பெண் ஒருத்தியை மணந்து , ராமன் குட்டி என்ற நபர் ஜப்பானுக்கே சென்று விட்டார் என்ரு எம்.ஜி.ஆருக்கு தெரிய வந்தது.
உலகம் சுற்றும் வாலிபன் படத்துக்காக டோக்கியோ நகரத்துக்கு சென்ற எம்.ஜி.ஆர் ஒரு நாள் நன்பர் ஒருவரை பார்க்க சென்ற போது நாயர் டீ ஸ்டால் என்ற டீ கடையை பார்த்த எம்.ஜி.ஆர் வியந்து போனார். காரை நிறுத்தச்சொல்லி உள்ளே சென்று விசாரித்தார் எம்.ஜி.ஆர்.
டோக்கியோ நகரில் நாயர் டீ கடையா ? ஆங்கிலத்திலும் ஜப்பானிய மொழியிலும் அந்தப் பெர்யர்ப்பலகை எழுதப்பட்டிருந்தது.
ஆர்வத்தில் காரில் இருந்து இறங்ட்கி ஊல்லே சென்று விசாரித்த எம்.ஜி.ஆருக்கு ஆச்சரியம்;
பல ஆண்டுகளாக எம்.ஜி.ஆரின் குடும்ப நன்பராக இருந்தவரும் கேரளாவில் எம்.ஜி.ஆர் வீட்டுக்கு அடுத்த வீட்டுக்காரராக இருந்தவருமான ராமன் குட்டி தான் அந்த நிறுவனத்தின் சொந்தக்காரர் என்று அறிந்ததும் எம்.ஜி.ஆருக்கு ஒரே மகிழ்ச்சி.
வயதாகி விட்ட போதிலும் ராமன் குட்டிக்கு எம்.ஜி.ஆரின் மீது பாசம் குறையவே இல்லை, எம்.ஜி.ஆர் வாழ்க்கை, திரைப்பட விஷயங்கள், குடும்ப விஷயங்கள் பற்றிக்கேட்டறிந்து மகிழ்ந்தார்.
என் திருப்திக்கு அவருக்கு வேண்டிய பணம் கொடுத்தேன்; எனக்கு மனம் நிறைவாக இருக்கு... என்று கூறினார் எம்.ஜி.ஆர்.
நன்றி மறவாமல் பல ஆண்டுகள் சென்றும் , வேறு நாடு சென்றிருந்த போதும் தனக்கு உதவியவரை தேடி பணம் கொடுத்து மகிழ்ந்தவர் எம்.ஜி.ஆர்.
***
1977 சட்டசபை தேர்தல் நடைபெற்றது, அ.தி.மு.க சார்பில் மன்னார்குடியில் போட்டியிட்டார் அழகு திருநாவுக்கரசு, சவுரி ஐய்யங்கார் என்ற உள்ளூர் பெரும் பணக்காரர், பெரிய மீட்டிங் ஏற்பாடு செய்திருந்தார் . இரவு ஏழரை மணிக்கு அந்தக்கூட்டத்தில் எம்.ஜி.ஆர் பேச வேண்டும். ஆனால், வழியில் பல கூட்டங்களில் பேசிவிட்டு எம்.ஜி.ஆர் மன்னார்குடி வந்து சேர்ந்த போது நல்லிரவு 2 மணி.
இரவு பத்து மணிக்கு மேல் தேர்தல் பிரச்சாரம் செய்யக்கூடாது என்ற தேர்தல் விதிமுறைகள் அப்போது வரவில்லை.
இரண்டு மணிக்கு பேச்சை ஆரம்பித்த எம்.ஜி.ஆர், இந்தக்கூட்டத்துக்கு தவிர்க்க முடியாத காரணங்களால் சில மணி நேரம் தாமதமாக வர நேரிட்டது. அதர்க்காக உங்கள் அனைவரிடம் மன்னிப்புக்கேட்டுக்கொள்கிறேன்.. என்றார்.
'நீங்க ஒன்னும் மன்னிப்பு கேக்க வேண்டாம் நீங்க இங வந்ததே எங்களுக்கு பெரிய சந்தோஷம்' என்றனர் கூட்டத்தினர். அவர்கள் அன்பையும் ஆதரவையும் இரு கரம் கூப்பி வணங்கி விட்டு பேச ஆரம்பித்தார்.
***
கூட்டங்களில் எம்.ஜி.ஆர் பேசும்போது கருணாநிதியை பற்றி தன் பேச்சில் குறிப்பிடும் போது கலைஞர் கருணாநிதி என்றே குறிப்பிடுவார்.
யாரையும் மரியாதை குறைவாகப் பேசமாட்டார்.
சில கூட்டங்களில் பேசும்போது ' எனக்கு சொத்து எதுவும் வேண்டாம். நீங்க என்மேல இவ்வளவு பாசம் வைச்சிருக்கீங்க... உங்க ஒவ்வொருத்தர் வீட்டிலும் ஒரு வேளை சாபிட்டால் கூட , என் ஆயுசு பூராவும் சாபிடலாம். நீங்க தான் எனக்கு எல்லாம் என்று சொல்லுவார் எம்.ஜி.ஆர்.
***
எம்.ஜி.ஆர் தமிழக முதலமைச்சராக இருந்த நேரத்தில், தமிழக அரசின் தலைமை செயலகத்திற்கு செல்லும்போது காருக்கு முன் பைலட் ஜீப் போகும் அதில் காவல்துறை அதிகாரிகள் இருப்பார்கள்.
TMX4777 என்ற அம்பாசிடர் காரில் பயணம் செய்வார் எம்.ஜி.ஆர்.
அவர் செல்லும் வழியில் டிராஃபிக்கில் எந்த மாற்றமும் இருக்காது. ரோட்டில் வண்டி ஓட்டுபவர்கள் யாரும் எம்.ஜி.ஆரின் கார் கடப்பதற்காக தங்கள் வண்டிகளை நிறுத்த மாட்டார்கள்
ஒரு முறை தேனபேட்டை சிக்னல் அருகே, எம்.ஜி.ஆரின் கார் மீது ஒரு ஆட்டோ மோதி விட்டது. உடன் இருந்த காவல்துறை அதிகாரிகள் ரொம்ப டென்ஷனாகி விட்டனர். ' ஐய்யா, என்னை மன்னிச்சுடுங்கைய்யா... வண்டியிலே பிரேக் சரியா பிடிக்கல...' என்று பயத்தால் அழ ஆரம்பித்து விட்டார் அந்த ஆட்டோகாரர்.
பயப்படாதே! என்று அவருக்கு ஆறுதல் சொன்னார் எம்.ஜி.ஆர்.
பிறகு ஆட்டோக்காரரிடம் 1500 ரூபாய் கொடுத்து ' வண்டியில ஏதாவது டேமேஜ் ஆகியிருந்தா சரி பண்ணிக்கோ... டிராஃபிக்கில பார்த்துப்போ! என்று அட்வைஸ் பண்ணினார்.
***
1980 தேர்தல் சமயம் அ.இ.அ.தி.மு.க சார்பில் தமிழகமெங்கும் சுற்றுப்பயணம் செய்தார் எம்.ஜி.ஆர். மதுரை அருகே வாடிப்பட்டி என்ற இடத்துக்கு எம்.ஜி.ஆர் சென்ற போது, காங்கிரஸ் கட்சிக்காக பிரச்சாரம் செய்வதற்கு அதே ஊருக்கு வந்திருந்தார் சிவாஜி கனேசன். அதை அறிந்த எம்.ஜி.ஆர் அவர் அங்கிருந்து சென்ற பிறகு நாம் போகலாம் என்றார்.
வண்டிகளை அருகில் இருந்த சந்துக்குள் போகுமாறு சொன்னார். சிலருக்கு அவர் சொன்னது பிடிக்கவில்லை... ' நாம் ஏன் காத்திருக்க வேண்டும் ?? ' என்று கேட்டார்கள். ' சிவாஜியும் நானும் நெருங்கிய நன்பர்கள் . எங்களுக்குள்ளே எந்தப்பிரச்சனையும் எப்போதும் இருந்தது இல்லை. அவர் வந்து இருக்காரு. அவர் போன பிறகு நாம் போகலாம். தேர்தல் நேரத்துல எந்தப்பிரச்சனையும் வேண்டாம்...' என்று சொன்னார்.
***
சிறிது நேரத்தில் சிவாஜியும் அவருடன் வந்தவர்களும் சென்ற பிறகு எம்.ஜி.ஆர் கிளம்பினார்.
சிறிது தூரத்தில் ரோட்டில் ஒரே கூட்டம். விசாரித்ததில், சிவாஜி குரூப்பில் சென்ற ஒரு கார், ஆறு வயது சிருவன் மீது மோதி அவன் இறந்து விட்டான் , கார் நிற்காமல் போய்விட்டது என்பது தெரிய வந்தது.
நடந்த விவரங்களை அறிந்ததும், சிறுவனின் தந்தையை அழைத்து அவரிடம் 25,000 ரூபாய் கொடுத்தார் எம்.ஜி.ஆர்.
அவருடைய எட்டு வயது மூத்த மகனுக்கு, கல்லூரி படிப்பு வரை ஆகும் எல்லா படிப்பு செலவையும் தான் ஏற்பதாக அவருக்கு வாக்களித்தார் எம்.ஜி.ஆர்.
'சிவாஜிக்கு இந்த விபத்து நடந்தது தெரிந்து இருக்க நியாயம் இல்லை, தெரிந்திருந்தால் அவரும் உங்களை சந்தித்து ஆறுதல் சொல்லியிருப்பார்...' என்று சிவாஜிஜையும் விட்டுக்கொடுக்காமல் பேசினார் எம்.ஜி.ஆர்.
எம்.ஜி.ஆர் பேசிய பிறகு தான் ஆயிரம் பேர் உள்ள அந்தக்கூட்டம் கலைந்து சென்றது.
மறுநாள் காலையில் சிவாஜி தங்கியிருந்த ஹோட்டலுக்கு ஃபோன் செய்து, இரவு நடந்த விஷயங்களை சொல்லிவிட்டு, ' உங்க டிரைவரை ஜாக்கிரதையாக நிதானமாகப் போகச்சொல்லுங்க...' என்றார் என்.ஜி.ஆர். ' நடந்த விஷயம் எனக்குத் தெரியாது. யாரும், எதுவும் சொல்லலை. மூடி மறைச்சுட்டாங்க...' என்று வருத்தப்பட்டார் சிவாஜி.
*******************
என்னங்க எம்.ஜி.ஆர் பத்தி பல தெரியாத விஷயங்கள் தெரிஞ்சுக்கீட்டீங்களா ??
அட இது பாதிதாங்க... அவர பத்தி சொல்ல என்னும் எவ்வளவோ இருக்கு ஆனா எல்லாத்தையும் ஒரே பதிவுல சொல்லீட்டா அப்புறம் வேற பதிவுக்கு நான் எங்க போறது ?? ஹிஹி அதனால பார்ட் 2 கூடிய சீக்கிரம் எழுதுறேன்.
இவ்வளவு நேரமும் அலை கடல் என திரண்டு வந்து (?!?!) என்னோட பதிவ பொறுமையா இருந்து படிச்ச உங்களுக்கு ரொம்ப நன்றி
உங்களுக்கு என்னோட பதிவு பிடிச்சிருந்தா பின்னூட்டத்தில கருத்து போட்டீங்கன்னா என் வலைப்பூவுக்கும் ஏதோ கொஞ்சப்பேர் வற்றாங்கன்னு நினைச்சு சந்தோஷப்பட்டுக்குவேன் போனா போகுது உங்களால ஒருத்தன சந்தோஷப்படுத்த முடிஞ்சுதேனு போற போக்கில கருத்திட்டுட்டு போங்களேன் ( இந்தப்பொளப்பு பொளைக்கிறதுக்கு போய் பிச்சை எடுக்கலாம்னு தானே சொல்ல வர்றீங்க ? ஹிஹிஹி )
மறுபடியும் எம்.ஜி.ஆர் ஒரு சகாப்தம் பார்ட் 2 ல மீண்டும் சந்திப்போம்.
நன்றி.